Monday, October 3, 2011

கவிதைகள்

முதல் பார்வையில்
உருவான ஒன்று,
மறக்கமுடியாத மறுக்கமுடியாத
நிகழ்வாகிப் போனது..
சிறு புன்னகையில் தொடங்கி,
மௌனத்தில் புரிந்து,
விழி மொழியில் பேசிய
அழகியத் தருணங்கள் அவை...
விடவேண்டும் என்று நினைத்தும்
விழக்கூடாது என்று நடித்தும்,
விருப்பத்தை மறைத்தும்,
உள்ளிருக்கும் காதலை
அணுஅணுவாய் நான் மட்டும்
ரசித்த நேரம் அது...
புரிந்தும் புரியாத உன் சிரிப்புகள்,
கவிபேசிய உன் மொழிகள்,
எதிர்பாரா உன் அக்கறைகள்,
எதிர்பார்த்து ஏமாந்த தருணங்கள்
கு
ந்தையை பேணுதல் போன்ற
உன் அன்பு,
என்று எனக்கே எனக்காக நீ,
இனி என்ன வேண்டும் எனக்கு
எல்லாமுமாய் நீ என்னோடு
இருக்கையில்,
உன்னோடு
வாழும் இந்த ஆனந்த காலங்களே
போதும் எனக்கு....

Friday, August 19, 2011

Welcome

எனது வலை தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்